Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ரெய்சன்:மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் இருந்து, சத்தார்பூர் நோக்கி, தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை, ரெய்சன் மாவட்டத்தில் உள்ள, ரிச்சான் ஆற்றுப் பாலத்தை பஸ் கடந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், ஆற்றில் விழுந்தது. இதில், ஏழு பேர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்; 30 பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சேர்ந்த மாநில முதல்வர் கமல்நாத் உத்தரவிட்டார்.